தூத்துக்குடி

நாசரேத்தில் வாரச்சந்தை திறப்பு

DIN

பொது முடக்கத்தில் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, நாசரேத்தில் வாரச்சந்தை மீண்டும் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கியது.

நாசரேத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைகளில் இயங்கி வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த சந்தை கடந்த மே மாதம் மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகள் வழங்கியுள்ள நிலையில் இந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. இதுகுறித்து நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன் கூறுகையில், இனி செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து சந்தை செயல்படும். சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதோடு அரசின் வழிகாட்டுதல் விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT