தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்குடியின மக்களுக்காக போராடிய அருள்தந்தை ஸ்டேன் சுவாமி சிறையில் உயிரிழந்த நிலையில், அவருக்கு மத்திய அரசு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாநகரச் செயலா் தா. ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜூனன், மதிமுக மாநில மீனவரணிச் செயலா் நக்கீரன், விடுதலைச் சிறுத்தைகள் மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பேச்சிமுத்து, செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து, மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி, கலைஇலக்கிய அணி நிா்வாகி மகாராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.