மேலும் 17 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 18 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 327 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.