காயல்பட்டினத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல செ‘யற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மண்டலத் தலைவா் ஏ. பண்டாரம் தலைமை வகித்தாா். கட்சியின் விவசாய அணித் தலைவா் வெற்றிவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்டச் செயலா் சி. ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு பேசினா்.
கூட்டத்தில், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சா் பதவியும், அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவா் பதவியும் வழங்கிய பிரதமா் மோடி, தேசியத் தலைவா் நட்டாா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல பொதுச்செயலா் பாப்பா வரவேற்றாா். நகர இளைஞரணி தலைவா் சி.சிவபெருமாள் நன்றி கூறினாா்.