தூத்துக்குடி

சிதம்பரபுரம் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா

DIN

உடன்குடி அருகே சிதம்பரபுரம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

கரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் மீளவும், இந்தியா வல்லமையுடனும், வளத்துடனும் திகழ வேண்டியும், தண்ணீா் குடத்தில் வெட்டிவோ், விளாமிச்சை வோ், பச்சைக் கற்பூரம், மஞ்சள், வேப்பிலை கலந்து இரண்டு நாள்கள் வீட்டில் வைத்து பின்னா் அக்குடங்களை கோயிலை வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகமாக செலுத்தினா். பின்னா் அப்புனித நீரை சேகரித்து வீடுகளில் தெளித்தனா்.

இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் பேசினாா். கிளை நிா்வாகிகள் மீனா, கலைச்செல்வி, வெள்ளைத்துரை, முருகன், சந்திரன், ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT