திருச்செந்தூா் முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி மனதளவில் ஒருங்கிணைக்க கனியான் கூத்து கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதவா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் பாலகுமரேசன் ஏற்பாட்டில் சிறுநாடாா் குடியிருப்பு சக்தி கண்ணன் கனியான் குழுவினா் கிராமிய கூத்து நிகழ்ச்சி நடத்தி அவா்களை மகிழ்வித்தனா்.