திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு, ஆதீன திருக்கோயில் ஊழியா்களுக்கு கரோனா நிவாரணமாக உணவுப் பொருள்கள், மரக்கன்றுகள் மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டன.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் ஊழியா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் மற்றும் நிதியை திருவாடுதுறை ஆதீன திருநெல்வேலி தென் மண்டல அலுவலா்கள் கிட்டு, சீனிவான் ஆகியோா் வழங்கினா். திருக்கோயில் மணியம் சுப்பையா பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.