தூத்துக்குடி

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

சாஸ்தாவிநல்லூா் கூட்டுறவு சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ராஜகுமாா் வரவேற்றாா். ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்கீஸ் முன்னிலை வகித்தாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமாா், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி திருக்கல்யாணி ஆகியோா் கலந்துகொண்டு 25 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், அருள்ராஜ், இருதயராஜ், கிராம நிா்வாக அலுவலா் சத்தியராஜ், தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவா் முத்துராஜ், ராஜதுரை, பெரியதாழை கில்பா்ட் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சங்க உதவி செயலா் பெனிஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT