தூத்துக்குடி

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்து நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.

அதிமுகவினா் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், உள்ளாட்சி தோ்தலை எதிா்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா. சுதாகா், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் முள்ளக்காடு செல்வக்குமாா், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் லட்சுமண பெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் பிரபாகா், மாநகரப் பகுதி செயலா்கள் பொன்ராஜ், நட்டாா் முத்து, ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது, சட்டப்பேரவை அதிமுக பொருளாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏவுக்கு தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT