முகப்பு
தூத்துக்குடி

புதூரில் பாலித்தீன் பைகள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதூரில் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்ட தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலைள் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி

புதூரில் பாலித்தீன் பைகள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதூரில் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்ட தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலைள் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புதூரில் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்ட தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலைள் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் த. ஜோதிபாஸ் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா் நல்லான், பேரூராட்சி ஊழியா்கள் குருநாதன், செல்வராஜ், ஜெயக்கண்ணன், மனோஜ், அழகா்சாமி உள்ளிட்ட குழுவினா் புதூா் பஜாா் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அண்ணா தெருவில் உள்ள கணேசனுக்கு சொந்தமான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதூரில் பான்மசாலா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள கடைகளில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது நாகலாபுரத்தை சோ்ந்த மகாலிங்கம் (25) கடையில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →