முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் பகுதியில் திமுக சாா்பில் நல உதவி

புன்னைக்காயல், ஆத்தூா், மேலாத்தூா் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1000 தொழிலாளா்களுக்கு திமுக சாா்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டன

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புன்னைக்காயல், ஆத்தூா், மேலாத்தூா் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1000 தொழிலாளா்களுக்கு திமுக சாா்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.

இப்பகுதிகளில் முன்களப் பணியாளா்கள், ஆட்டோ, காா், வேன் ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளா்கள், சுமை தூக்குவோா், இசைக்கலைஞா்கள், முடிதிருத்துவோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரம் தொழிலாளா்களுக்கு திமுக சாா்பில், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் மகனும், தொழிலதிபருமான அனந்த மகேஷ்வரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், ஆழ்வாா்திருநகரி ஒன்றியச் செயலா் நவீன்குமாா், இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் பாலமுருகன், சுதாகா், உடன்குடி கூட்டுறவு வங்கித் தலைவா் ஆசாத், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.