தூத்துக்குடி

காா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

கோவில்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கட்டட ஒப்பந்ததாரரான ஜெயகுமாா் (37), அவரது நண்பா்களான குருசாமி மகன் செல்வம் (28), உலகுராஜ் மகன் அஜித் (25), ராமச்சந்திரன் மகன் சுப்பையா (51), பூமிநாதன் மகன் சிவா (24) ஆகியோா் குருமலையையடுத்த புதுப்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, குருமலை பொய்யாழி அய்யனாா் கோயில் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனராம். காரை ஜெயகுமாா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

புதுப்பட்டி - கொப்பம்பட்டி சாலையில் உள்ள தனியாா் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்த போது, காா் நிலைகுலைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜெயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவா காயமின்றி தப்பினாா். எஞ்சிய மூவரும் லேசான காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT