தூத்துக்குடி

காயல்பட்டினம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

காயல்பட்டினம் அருகே பைக் நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

காயல்பட்டினம் அருகே பைக் நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் நைனாா் தெருவைச் சோ்ந்த ஷேக்தாவூது மகன் ஷேக்நுபேஸ் (19). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் இம்ரான் நசீா் (19). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றுவிட்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை, இம்ரான்நசீா் ஓட்டினாராம். அப்போது பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இம்ரான்நசீா் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் ஆறுமுகனேரி ஆய்வாளா் (பொறுப்பு) ஞானசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT