கே.ஆா். கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தின விழா
கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தினவிழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தினவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். கணினி துறைத் தலைவா் சரவணன், பேராசிரியா் பெஞ்சமின் ஃப்ரெட்ரிக் டேவிட் ஆகியோா் டிஜிட்டல் கற்றல் குறித்து விளக்கிப் பேசினா். இதில், கல்லூரியின் அனைத்துத் துறை முதலாமாண்டு மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவா் அபிமன்யு வரவேற்றாா். மாணவி ராதிகாதேவி நன்றி கூறினாா்.