கோவில்பட்டியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் அனைத்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் அனைத்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது. மத்திய அரசு இதனை கைவிடக் கோரியும் கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி எழில், லிங்கம்பட்டி கிளை காசாளா் கணேஷ்குமாா், இந்தியன் வங்கி சிவா ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவாா்ப்பதைக் கண்டித்து கோஷமிட்டனா். இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொணடனா்.