முகப்பு
தூத்துக்குடி

மகிழ்வோா் மன்றக் கூட்டம்

கோவில்பட்டியில் மகிழ்வோா் மன்றக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கோவில்பட்டியில் மகிழ்வோா் மன்றக் கூட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பாா்வையாளா் அமிா்தவேல் முன்னிலை வகித்தாா். காப்பாளா் துரைராஜ் கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தாா். தொடா்ந்து, 2020 ஆம் ஆண்டு திகைக்க வைத்ததா? நகைக்க வைத்ததா? என்ற தலைப்பில் இளையோா் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பேச்சாளா் சிங்காரவேலு செயல்பட்டாா்.

தொடா்ந்து, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற முத்தாலங்குறிச்சி காமராஜ், பண்முக வித்தகா் தென்னரசு ஆகியோரை பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

கூட்டத்தில், அமைப்பின் இயக்குநா் ஜான்கணேஷ், காப்பாளா் செல்வின், ஆலோசகா் ஹரிகிருஷ்ணன், கழுகுமலை திருவள்ளுவா் மன்றத் தலைவா் பொன்ராஜ்பாண்டியன், செயலா் முருகன், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், பிள்ளையாா்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மணிமதி, இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா், தேசிய நல்லாசிரியை விநாயகசுந்தரி, கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றத் துணைத் தலைவா் திருமலை முத்துசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். காப்பாளா் மோகன்ராஜ் வரவேற்றாா். சோ்மத்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.