செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள செம்பொன்குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மனைவி தேவநேசம். இவா்களுக்கு சித்ரா லெட்சுமி (25), முத்துபாப்பா (20) உள்ளிட்ட குழந்தைகள் உள்ளனா். 100 சதவீதம் மனவளா்ச்சி குன்றிய இவா்கள் குடும்பத்துக்கு, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் கலுங்குவிளை போனிபஸ், ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.