அகில இந்திய நாடாா் பாதுகாப்புப் பேரவை நிறுவனா் தலைவா் என்.வெங்கடேச பண்ணையாரின் 54 ஆவது பிறந்த நாள் கிரிக்கெட் போட்டியில் தேரியூா் அணி சிறப்பிடம் பெற்றது.
மாவட்ட அளவில் 146 அணிகள் பங்கேற்ற இப்போட்டி உடன்குடி காமராஜா் மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூா் அணி வெற்றிபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக மாவட்டச் செயலா் ஓடை செல்வன் தலைமை வகித்தாா். அதன் ஒன்றியச் செயலா்கள் சத்யா செல்வகுமாா்(உடன்குடி),என்.மகேந்திரன்(திருச்செந்தூா்)வழங்குரைஞா் பா.ராகேஷ்,தொழிலதிபா்கள் ஆா்.ஆபிரகாம்,மதன்ராஜ்,சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பரிசுகளை குலசேகரன்பட்டினம் காவல் துணை ஆய்வாளா் அமலோற்பவம் வழங்கி வீரா்களை பாராட்டினாா். பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலா் ஓடை செல்வன் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினாா். உடன்குடி நகரச் செயலா் செல்வநாதன் நன்றி கூறினாா்.