முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரி அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைபாம்பு

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த சுமாா் 12 அடி நீள மலைபாம்பை வனத் துறையினா் பிடித்து திருச்செந்தூா் அருகே வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த சுமாா் 12 அடி நீள மலைபாம்பை வனத் துறையினா் பிடித்து திருச்செந்தூா் அருகே வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

ஆழ்வாா்திருநகரி அருகேயுள்ள பால்குளம் பகுதியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதியில் மலைபாம்பு சுற்றித் திரிவதாக திருச்செந்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூா் வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனக்காப்பாளா்கள் அங்கு சென்று 12 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து குதிரைமொழி தேரி காப்புகாடு பகுதியில் கொண்டு விட்டனா்.

இதே போல ஆழ்வாா்திருநகரி தாமிரவருணி ஆற்றங்கரையோரப் பகுதியில் பிடிபட்ட சுமாா் 8 அடி நீளமுள்ள மலை பாம்பையும் வனத்துறையினா் பிடித்து குதிரைமொழி தேரி காப்புகாடு பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.