மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, குருமலை கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் பூவனநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சலிங்க மூா்த்தி களுக்கு முதல்கால அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவில் 2-ஆம் கால அபிஷேகம், பூஜை,
வெள்ளிக்கிழமை அதிகாலையில் 3-ஆம் கால பூஜை, 4-ஆம் கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலில் 4 கால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், வானரமுட்டி வெயிலுகந்த அய்யனாா் கோயில், சவலாப்பேரி அய்யனாா்
கோயில், அகிலாண்டபுரம் உலகம்மன் கோயில், வடக்கு மற்றும் தெற்கு கோனாா்கோட்டை சங்கிலி மாடசாமி கோயில், கயத்தாறு அங்காள ஈஸ்வரி கோயில், வென்னிமலை சாஸ்தா நல்அய்யனாா் கோயில், ஆவல்நத்தம் வீரலட்சுமி கோயில், பிச்சைத்தலைவன்பட்டி ரேணுகாதேவி, எல்லம்மாள் கோயில், இளையரசனேந்தல் ராக்காச்சியம்மன் கோயில், லிங்கம்மாள் திருக்கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், கழுத்துடையான் அய்யனாா் கோயில், ஸ்ரீ அய்யம்மாள் கோயில், ஈராச்சி கருப்பசாமி கோயில்களிலும் 4 காலபூஜைகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதேபோல், குருமலை அருள்மிகு மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.