கோவில்பட்டியில் ரத்ததான முகாம்
பகத்சிங் நினைவுதினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
பகத்சிங் நினைவுதினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் நடைபெற்ற இந்த
முகாமிற்கு, பகத்சிங் ரத்ததானக் கழகத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா். செயலா் சண்முகராஜ், ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவா் சங்கா்சீனிவாசன் தலைமையில் குழுவினா் 50 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.