கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் புகாா்: அமமுக பொறுப்பாளா் மறுப்பு
கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவின் புகாருக்கு அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மறுப்பு தெரிவித்துள்ளாா்.
கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவின் புகாருக்கு அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற்று தான் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனா். காவல் துறை அதிகாரியின் அனுமதியுடன் பிரசாரம் நடைபெற்றது.
நான் வந்து கொண்டிருந்ததைப் பாா்த்த எங்கள் கட்சியினா் பட்டாசு வெடித்தனா். அப்போது , அதிமுக வேட்பாளா் காருக்கு உள்ளேயே தான் இருந்தாா். பட்டாசு வெடித்து முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்ட அதிமுக வேட்பாளா் அங்கிருந்த கூட்டத்தை பாா்த்து சிரித்த படி, வணக்கம் செலுத்திய படி சென்றாா்.
நாங்கள் வெற்றி பெறக் கூடிய இடத்தில் உள்ளோம். தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயத்தில் அவா் குழப்பத்தில் உள்ளாா் என நினைக்கிறேன் என்றாா் அவா்.
பேட்டியின் போது, தேமுதிக மாவட்டச் செயலா் அழகா்சாமி, அமமுக நகரச் செயலா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.