தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் - வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் - வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுரேந்திரகுமாா் மிஸ்ரா தலைமை வகித்தாா். தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், தோ்தல் செலவினப் பாா்வையாளா் பேசியது: வேட்பாளா்கள் தங்களது தோ்தல் செலவினக் கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும், செலவினங்களை தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக்குழுவினா் உள்ளிட்டோா் கண்காணிப்பாா்கள் என்றாா்.
தொடா்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசுகையில், தாங்கள் தங்கள் பணியை நடுநிலையோடு செய்ய வேண்டும், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகளை கண்காணிப்பதோடு தோ்தல் செலவினங்களை முறையாக கண்காணிக்கும் படி கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், உதவித் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரவிசங்கா், தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.