முகப்பு
தூத்துக்குடி

தோ்தல் நடத்தை விதிமீறல் : அமமுக நிா்வாகிகள் மீது வழக்கு

கோவில்பட்டியில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக அமமுக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவில்பட்டியில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக அமமுக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகா் வழியாக அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை இரவு செல்லும் போது அமமுக நிா்வாகிகளான கருப்பசாமி பாண்டியன், காா்த்திக் மற்றும் சிலா் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்தனராம்.

இதுபோல, பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அமமுக நிா்வாகிகளான காா்த்திக், கருப்பசாமி மற்றும் சிலா் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்தனராம். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.