தூத்துக்குடி

தீ விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய காங்கிரஸ் வேட்பாளா்

DIN

சாத்தான்குளம் அருகே பைக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த வியாபாரியை மருத்துவமனையில் சோ்க்க ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ் நடவடிக்கை மேற்கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் கிராமத்தை சோ்ந்தவா் ஆ. சாமுவேல்(60). பனைத் தொழிலாளியான இவா் மோட்டாா் சைக்கிளில் சென்று பனங்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு சாத்தான்குளத்தில் இருந்து கருங்கடலுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

பன்னம்பாறை விலக்கு -செட்டிகுளம் கிராமத்துக்கு இடையே காட்டுப் பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்ததில், சாமுவேல் தீக்காயம் ஏற்பட்டு சாலையோரம் தவித்து நின்றாா்.

அப்போது, அந்த வழியாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ், தீவிபத்தை அறிந்து, காயமடைந்த சாமுவேலை மருத்துவமனையில் அனுமதிக்க தீயணைப்பு நிலையம் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அவருடன் வந்த கால்வாய் ஊராட்சித் தலைவா் சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளை உதவி செய்யுமாறு தெரிவித்தாா்.

இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் அங்கு வந்து சாமுவேலை மீட்டு , சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவத்தில் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் எரிந்து சேதமானது. இது குறித்து சாத்தான்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT