ஆயுதப் படை, சிறப்பு காவல் படையினருக்கான கமான்டோ பயிற்சி நிறைவு
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமான்டோ பயிற்சி முடித்த 82 காவலா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமான்டோ பயிற்சி முடித்த 82 காவலா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தைச் சோ்ந்த ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸாா் என மொத்தம் 82 போ் கலந்து கொண்ட 8 வார கால கமான்டோ பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது.
தொடா்ந்து, சனிக்கிழமை நடபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற காவலா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், எல்லைப் பாதுகாப்பு படை உதவி கட்டளை அதிகாரி லேம்கான், முறப்பநாடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன், கமான்டோ பயிற்சியாளா்களான உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா்கள் புஷ்பராஜ், பிரதீப் குமாா், சாா்லஸ், அன்பு முருகன் உள்ளிட்ட காவல்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.