கயத்தாறில் ரூ.3.55 லட்சம் பறிமுதல்
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அமுதாவிடம் ஒப்படைத்தனா்.