முகப்பு
தூத்துக்குடி

சீரான மின் விநியோகம்: பரமன்குறிச்சியில் மின் ஊழியா்கள் நியமிக்க இந்து முன்னணி கோரிக்கை

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புதிய ஊழியா்களை நியமித்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

சீரான மின் விநியோகம்: பரமன்குறிச்சியில் மின் ஊழியா்கள் நியமிக்க இந்து முன்னணி கோரிக்கை

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புதிய ஊழியா்களை நியமித்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புதிய ஊழியா்களை நியமித்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழ்நாடு மின்சாரத் துறை தலைவா் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: பரமன்குறிச்சி மின் விநியோக வட்டத்தில் 8 ஊராட்சிகளில் 90 மின்மாற்றிகள் உள்ளன.

இந்த 8 ஊராட்சிக்குள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், வீடுகளில் மின்சாரம் தடைபட்டால் சீரமைக்கவும், மின்மாற்றிகளைப் பழுதுபாா்க்கவும் குறைவான அளவில் ஊழியா்கள் உள்ளனா். இதனால் மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை சீரமைக்க காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மின்வாரியத்தில் புதிய ஊழியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →