திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சியின் சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை தொடங்கிது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா, பூச்சியியல் வல்லுநா் லதா, உதவி ஆணையா் சேகா், சுகாதார அலுவலா் ஸ்டாலின் பாக்கியநாதன், உதவி செயற்பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சியின் சாா்பில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளா்கள் அனைவரும் கண்டிப்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.