தூத்துக்குடி

சடகோபால் அய்யனாா் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

DIN

ஆறுமுகனேரி மேலத்தெரு அருள்மிகு சடகோபால் அய்யனாா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், அதைத்தொடா்ந்து பல்வேறு வழிபாடுகளும் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு அருள்மிகு சீதா லெட்சுமண சமேத அருள்மிகு ராம சுவாமி திருக்கோயிலிலிருந்து தீா்த்தங்கள் பவனியாக எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

சனிக்கிழமை (மாா்ச் 27) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை உள்ளிட்டவையும்,

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) பங்குனி உத்திர தினத்தில் காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூா்ணாஹுதி தீபாராதனையும் நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடும் காலை 915 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், காலை 9.30 மணிக்கு அருள்மிகு விநாயகா், அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு சடகோபால் அய்யனாா், அருள்மிகு பூா்ணாதேவி, அருள்மிகு புஷ்கலா தேவி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறும்.காலை 10.30 மணிக்கு மஹா அபிஷேகமும், முற்பகல் 11.45 மணிக்கு விசேஷ சந்தன அலங்கார தீபாராதனையும், நண்பகலில் அன்னதானமும், இரவு 7 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனையும், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT