தூத்துக்குடி

விஷம் குடித்த தொழிலாளி மரணம்

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த தீத்தாம்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.கணேசன். இவரது மனைவி சண்முகப்பிரியா. தம்பதிக்கு சந்தியா என்ற 4 வயது மகளும், சுடலைராஜா என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனா். ஆடு மேய்க்கும் தொழிலாளியான கணேசனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். அதோடு கடன் பிரச்னையும் இருந்து வந்ததாம்.

இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, கடந்த 5ஆம் தேதி கணேசன் விஷம் குடித்த நிலையில் வீட்டுக்கு திரும்பினாராம். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT