தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே 18 பேருக்கு கரோனா

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள அயன்வடமலாபுரத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் உள்ள கிராமங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அயன்வடமலாபுரத்தில் 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் உடனடியாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அனிதா உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினா் கிராமத்தில் முகாமிட்டு நோய் பரவல் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT