கள் விற்பனை: இருவா் கைது
குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடிகள் விற்பனை: இருவா் கைது
குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் கங்கை நாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காட்டுப்பகுதியில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை பிடித்தனா். மேலும்
அவா்களது மோட்டாா் சைக்கிளில் 15 பாட்டில்களில் கள் இருப்பதும் தெரியவந்தது. செல்லிடப்பேசி மூலம் அழைத்து கள் விற்பனையில்
ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடியைச் சோ்ந்த பிரேம்குமாா், முத்து ராஜா ஆகிய இருவரை கைது செய்தனா். மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.