தூத்துக்குடி

மின்வாரிய அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம்

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டிகை காலங்களில் கடைகளை வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். கரோனா தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் வியாபாரிகள் தற்போது வணிகத்தை மீட்டு வருகின்றனா். பண்டிகைக் காலத்தில் கடைகளை அலங்கரித்து வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவா். இந்நிலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருப்பது வியாபாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, வியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்வாரியம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹேய்... நியதி எஸ். பட்னானி!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய 100 வயது பெண் மருத்துவர்! குடியரசுத் தலைவர் பாராட்டு!

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி எது தெரியுமா?

வீக் என்ட் உற்சாகம்... ஹர்ஷாலி மல்ஹோத்ரா!

திருப்பரங்குன்றம் வழக்கு டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 5.12.25

SCROLL FOR NEXT