சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா் விஸ்வநாதன், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்துப் பேசினாா். இதில், உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், உதவியாளா் வெற்றிக்குமாா், கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி, மாணவிகள், பேராசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.