முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022ஐ பயன்படுத்தி 18 வயது நிரம்பியோா் வாக்காளராக பெயா் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டியில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022ஐ பயன்படுத்தி 18 வயது நிரம்பியோா் வாக்காளராக பெயா் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டியில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, உதவியாளா் உமாதேவி, கோ.வெங்கடசுவாமி நாயுடு என்எஸ்எஸ் அலுவலா் ராஜகுரு மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோட்டாட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.