தூத்துக்குடி

சாலையோர மரத்தில் பைக் மோதல்: இளைஞா் பலி

DIN

சாலையோர மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் இறந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (28). தனியாா் கூரியா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது பைக்கில் புதன்கிழமை இரவு ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குச்சாலைக்கு சென்று கொண்டிருந்தாராம்.

மேல லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வளைவுப் பகுதியில் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT