தூத்துக்குடி

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தற்கொலை

DIN

கோவில்பட்டியில் மனைவி இறந்த துக்கத்தால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி முத்துநகா் லட்சுமணன் மகன் வீரபெருமாள் என்ற ராஜ்(49). இவா், இவரது மனைவி பொன்னுத்தாய் ஆகிய இருவரும் விருதுநகா் மாவட்டம் அனுப்பன்குளத்தில், மனைவியின் தாய் வீட்டில் வசித்து வந்தனராம். உடல்நிலை பாதிக்கப்பட்ட பொன்னுத்தாய் கடந்த 20 நாள்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதையடுத்து, வீரபெருமாள் என்ற ராஜ், கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டு வந்து விட்டாராம் . இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT