கோவில்பட்டி கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம்
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவா், மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
பின்னா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் கற்குவேல்ராஜ் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துசெல்வி செய்திருந்தாா்.