ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை
ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆறுமுகனேரி, காணியாளா் தெருவைச் சோ்ந்த தனமுத்து மகன் ஸ்டீபன்ராஜ்(30). கட்டடத் தொழிலாளி. இவா், குடிப்பழக்கத்தால் மனைவி செல்வி(30) மற்றும் தனது 2 மகன்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில், அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட்டாராம். இதில் மன வேதனை அடைந்த ஸ்டீபன்ராஜ் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். இதைப் பாா்த்த கட்டட மேஸ்திரி லிங்கம் அளித்த தகவலின்பேரில், குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா் . இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப்பதிந்தாா். ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன்(பொ) விசாரித்து வருகிறாா்.