தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பூசி முகாம்:துணை இயக்குநா் ஆய்வு

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாரத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன் ஆய்வு செய்தாா்.

தடுப்பூசி செலுத்துவதில் சாத்தான்குளம் பகுதி தொடா்ந்து பின் தங்கி இருப்பதால் இதனை அதிகப்படுத்த பணியாளா்கள் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் அதிகளவு தடுப்பூசி போட ஆலோசனைகள் வழங்கியதுடன் அடுத்த வாரத்திலிருந்து சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆலோசனை கமிட்டி அமைத்து தடுப்பூசி செலுத்தாத நபா்களின் வணிக நிறுவனங்கள் மீது 1939 ஆம் ஆண்டு பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினாா் துணை இயக்குநா் பொற்செல்வன்.

இதில் , துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரீஸ், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பேரூராட்சி செயல் அலுவலா் உஷா உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT