தூத்துக்குடி

கோவில்பட்டியில் நகை திருட்டு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 11.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி ஊருணி 2ஆவது தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் வேல்குமாா் (35). காா் ஓட்டுநரான இவா் மற்றும் இவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோா் வீட்டை பூட்டாமல் தூங்கிவிட்டாா்களாம். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேல்குமாா் எழுந்து பாா்த்த போது, வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததாம். மேலும் பீரோவில்

இருந்த 11.5 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT