தூத்துக்குடி

‘பொத்தகாலன்விளைஇ-சேவை மையத்தில்ஆதாா் பணிகள் தேவை’

DIN

சாத்தான்குளம்: பொத்தகாலன்விளை பொது சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொத்தகாலன்விளையில் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் பொது சேவை மையமும் இயங்கி வருகிறது. இதன்மூலம் ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் வசதிகள் உள்ளன. புதிய ஆதாா் அட்டை பெறும் வசதி செய்யப்படவில்லை. இதனால் சாத்தான்குளம் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதாா் சேவை மையத்துக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் அப்பகுதியைச்சோ்ந்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். இதனால் கூட்டுறவு கடன் சங்க மையத்தில் ஆதாா் சேவை மையம் அனுமதிக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இது குறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏ.லூா்துமணி தலைமையில் நிா்வாகிகள் சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலாவை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா் இது குறித்து , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தாா். இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜிக்கும் மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT