முகப்பு
தூத்துக்குடி

கட்டுப்பாடுகள் தளா்வு:திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் ஒரு பகுதியாக, அனைத்து நாள்களிலும் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள், வழக்கம்போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.