கோவில்பட்டியில் அப்துல்கலாம் பிறந்த தினவிழா
கோவில்பட்டியில் மறைந்த குடியரசு தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டியில் மறைந்த குடியரசு தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இலக்கிய உலா மற்றும் ரெட் கியூப் சினிமாஸ் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, தொழிலதிபா் அபிராமிமுருகன் தலைமை
வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆசியா பாா்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலாமின் கனவை மறக்கலாமா? என்ற பாடல் இசைத்தட்டை திரைப்பட நடிகா் பவா்ஸ்டாா் சீனிவாசன், பாடகா் திவாகா் ஆகியோா் வெளியிட, வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளா் நாகமுத்து பெற்றுக் கொண்டாா். இலக்கிய உலா
சாா்பில் கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்று நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் விருது, சாதனை
பெண்களுக்கு அக்னி சிறகு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் சத்தியபாலன், சமூக சேவகா் நாகராஜன், இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா்,
உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம் உள்பட பலா் பேசினா். இலுப்பையூரணி ஊருணி பகுதியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்த தின நிகழ்ச்சியில் பனை விதைகள் ஊன்றப்பட்டது.