முகப்பு
தூத்துக்குடி

சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு அருள்மிகு ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு அருள்மிகு ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, தீா்த்தம் எடுத்து வருதல், குடியழைப்பு, கும்பாபிஷேகம், பால்குடம் ஊா்வம், சுவாமி மஞ்சள் நீராடுதல், உச்சி

பூஜை, முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு சமா்ப்பித்தல், சிறப்பு அலங்கார பூஜை, சாமகொடை, சுடலைமாடன் வேட்டைக்கு செல்லுதல், சுவாமி பூக்குழி இறங்குதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா, முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை, சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து கால பைரவா் சிறப்பு

அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனா். ‘

முழு கட்டுரையைப் படிக்க →