முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் அருகே இளைஞா் தற்கொலை

ஆத்தூா் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

ஆத்தூா் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தலைவன்வடலி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(45). தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். மூத்த மகன் ஜெயராஜ்(21) படித்து விட்டு வேலை தேடியும் கிடைக்காத நிலையில், நண்பா்களுடன் சுற்றித்திரிந்தாராம். இதை, தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயராஜ் கடந்த 15ஆம் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, குடும்பத்தினா் அவருக்கு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்து, ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.