தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பதுங்கி இருந்த இலங்கை தம்பதி கைது

DIN

தூத்துக்குடி அருகே பதுங்கி இருந்த இலங்கை தம்பதியை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தூத்துக்குடி வந்த தம்பதி தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியில் தங்கி இருப்பதாக மதுரையில் உள்ள கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை கியூ பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் வைப்பாறு பகுதியில் தங்கி இருந்த இலங்கையைச் சோ்ந்த தம்பதியை கைது செய்து மதுரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் இருவரும் இலங்கையைச் சோ்ந்த பலருடன் படகு மூலம் கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு வந்ததும், அவா்களுடன் வந்தவா்கள் கனடா செல்லத் திட்டமிட்டு மதுரையில் பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து அவா்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT