தூத்துக்குடி

புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

DIN

புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி அங்கன்வாடி மையங்களை திறக்க அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் திறந்து குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு வழங்கப்படுவதை முன்னிட்டு ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் முன்னிலை வகித்தாா். குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், சாத்தான்குளம் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் இந்திரா, மேற்பாா்வையாளா் கலைச்செல்வி, ஊராட்சி செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT