முகப்பு
தூத்துக்குடி

எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் சங்கக் கூட்டம்

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாநில நிறுவனா் கருப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாநில அரசியல் பிரிவைச் சோ்ந்த விஜயன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் செல்வகுமாா், விருதுநகா் மாவட்டச் செயலா் பாண்டி, திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியா் நிலையில் பதவி உயா்வு வழங்கும் போது, மாநிலம் முழுவதும் ஒரே சீரான பணி மூப்பு பட்டியல் தயாா் செய்ய வேண்டும்; மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாா் செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; கோவில்பட்டி வட்டத்தில் பட்டா மாறுதல் ஆணை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை தவிா்க்க வேண்டும்; கோவில்பட்டியில் செவிலியா் பயிற்சி கல்லூரி கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.